தால் பூரண் சப்பாத்தி சூப்பராக இருக்கும். எல்லாருக்கும் பிடிக்கும். எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க. கோதுமை மாவு ஒரு கப். மைதா மாவு ஒரு கப். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும். கடலைப்பருப்பு ஒரு கப். குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் ஜாரின் கால் கப் சீனி. 10 ஏலக்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் .பிசைந்து வைத்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை எடுத்து சப்பாத்திகளாக தேய்த்து. அதன் நடுவில் இந்த பருப்பு உருண்டை வைக்கவும். அதை மூடி கோதுமை மாவை தொட்டு மறுபடியும் சப்பாத்திகளாக தேய்க்கவும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து. சப்பாத்தியை போட்டு எடுக்கவும்.அதன் மேல் நெய் தடவி அடுக்கவும். தால் பூரண் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள ஜாம். இனிப்புச் சட்னி .உங்களுக்கு விருப்பப்பட்ட குருமா சேர்த்து சாப்பிடலாம் .அடுத்து இனிப்புச் சட்னி எப்படி பண்றதுனு தெரிஞ்சிக்கலாம்.
இலை அடை தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...
கருத்துகள்
கருத்துரையிடுக