காலிஃப்ளவரை சுத்தம் செப்து எடுத்து வையுங்க. உருளைக்கிழங்கு தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி வையுங்க அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து நாலு ஸ்பூன் எண்ணைய் விடுங்க காய்ததும் பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து. வெங்காயம் 2 தக்காளி 2 முந்திரிபருப்பு இவற்றை மிக்சியில் அரைத்து அதில் கலந்து பின் காலிபிளவர் .உருளைக்கிழங்கு. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத்தூள் . அதில் கலந்து கொஞ்சம் உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு .குக்கரில் 2 விசில் வைத்து. 10 நிமிடம் கழித்து. குக்கரின் மூடியைத் திறந்து. உருளைக்கிழங்கு நன்றாக மசித்து விடவும் . பின் எண்ணைய் பிரியும்போது ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதன் மேலே இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கமகம காலிஃப்ளவர் மசாலா ரெடி பிரியாணி.சப்பாத்தி .நாண்.பூரி இது எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம் .
வாணலியை அடுப்பில் வையுங்க. எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு காய்ந்ததும்.10 காய்ந்த மிளகாய்.2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு .பூண்டு 15 பல். தக்காளி-3 .உப்பு தேவையான அளவு இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு தட்டில் ஆறவைக்கவும்.பிறகு மிக்ஸி ஜாரில் நைஸாக அரைக்கவும் சூப்பரான பூண்டு தக்காளி சட்னி ரெடி
கருத்துகள்
கருத்துரையிடுக