பயத்தம்பருப்பு 500கிராம்.பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் நைசாக அரைக்கவும். அதில் குழவுசீனீ 1கிலோ.முந்திரி 50 கிராம். ஏலக்காய் 10 கிராம். இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் நைசாக அரைக்கவும். அதில் சேர்த்து அதனுடன் ஏலக்காய் பவுடர் சேர்த்து கைகளால் நன்றாக கலந்து விடவும் .பிறகு வாணலியில் நெய் 250 கிராம் விட்டு.காய்ந்ததும் அதில் 50 கிராம் முந்திரிப்பருப்பு. (சின்ன சின்னதாக நறுக்கி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு) நெய் மற்றும் முந்திரி பருப்பை அப்படியே நாம் கலந்து வைத்திருக்கும். பயத்தம்பருப்பு பவுடரில் சுற்றி ஊற்றி நன்கு கிளறி விடவும். எல்லா புறமும் நன்கு கிளறி. சூடு ஆறுவதற்குள் சின்ன சின்ன உருண்டைகளாக பயத்தம் பருப்பு லட்டு செய்யவும். பயத்தம் பருப்பு லட்டு ரெடி. (இதேபோன்று பயத்தம்பருப்பு க்கு பதிலாக. ரவையை வாணலியில் லேசாக வறுத்து விட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் .இதே போன்றுதான் ரவா லட்டு செய்ய வேண்டும்)
கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும். தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...
கருத்துகள்
கருத்துரையிடுக