மிளகாய் 6. கடலைப்பருப்பு 1 டீஸ்பூன். மல்லி 2 டீஸ்பூன். வறுத்து மிக்ஸியில் நைஸாக பொடி பண்ணி வச்சிக்கோங்க. வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு. உளுத்தம்பருப்பு. காய்ந்த மிளகாய் சேர்த்து. தக்காளி-2 கத்தரிக்காய் 3 நைசாக அதில் நறுக்கி சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் வெந்ததும் அந்த கத்தரிக்காயை நைசாக மசித்து விடவும். புளித்தண்ணீர் ஒரு கப் அதில் சேருங்க . பொடி செய்து வைத்திருக்கும் பவுடர். கொஞ்சம் உப்பு சேர்க்கவும் 15 நிமிடம் கொதிக்க விடுங்க. க கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.கொஸ்து ரெடி. இட்லி .தோசை. உப்புமா. பொங்கல் இது எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.
&
நிறைய பேர் கேட்கிற கேள்வி என்னன்னா?சமையலுக்கு ரீஃபைண்ட் ஆயில் யூஸ் பண்ணலாமா கேக்குறாங்க? செக்கு எண்ணெய் வாங்கி அதை நம்ம பயன்படுத்துவதுதான் நல்லது சொல்லுவேன். அது தரமானதாக இருக்கும் . சிலருக்கு அது பிடிக்காது. அதனால ஒரே மாதிரியாக எண்ணைய் வாங்காமல் வேற வேற பிராண்டட் பார்த்து வாங்கி உபயோகப்படுத்துங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக