பாஸ்மதி ரைஸ் 1 கப் தண்ணீர் விட்டு அலசி. தண்ணீரை வடித்துவிட்டு 10 நிமிடம் வைக்கவும் குக்கரை அடுப்பில் வைத்து. 4 ஸ்பூன் நெய் சேர்த்து .காய்ந்ததும்.அதில் பட்டை. கிராம்பு பிரிஞ்சி இலை.ஏலக்காய் இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து விட்டு.பாஸ்மதி ரைஸ் அதில் சேர்த்து.லேசாக வறுத்து தேவையான அளவு உப்பு 1 கப் தண்ணீர் விட்டுபாதி அளவு வெந்ததும்.அதில் ஆரஞ்ச் பழ ஜூஸ் எடுத்து ஒரு கப்.3 மூன்று ஸ்பூன் சீனி சேர்த்து.மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.வெந்தது அடுப்பை அனைத்து விட்டு. நெய் இரண்டு ஸ்பூன் சேர்த்துநன்றாக கிளறி விட்டு.ஒரு தட்டில் எடுத்து பரிமாறவும்.ஆரஞ்சு ரைஸ் ரெடி
தால் மக்கானி
உளுந்து நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய உளுந்துடன். குக்கரில் 5 விசில் வைத்து நன்றாக குழைய வேக வைக்கவும் .வாணலியை அடுப்பில் வைத்து .இரண்டு ஸ்பூன் வெண்ணெய் உருகியதும் வெங்காயம் நைசாக நறுக்கிய வெங்காயம் 3 .தக்காளி 4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் இவை அனைத்தையும். பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் . உளுந்து குழைய வேக வைத்த உளுந்தை இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் .ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை. சீரகம் தலா அரை டீஸ்பூன். தாளித்து கொதிக்கும் அந்த பருப்பில் சேருங்கள். மீதமிருக்கும் வெண்ணைய் அதில் சேர்க்கவும் ருசி நன்றாக இருக்கும். முடிந்தால் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம். தால் மக்கானி ரெடி. சப்பாத்தி பூரியுடன் சாப்பிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக