பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு: ஒரு சிறிய கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டினால் சுவையான மைசூர் பருப்பு சட்னி தயார்!
கார அடை
தேவையானவை: மைசூர் பருப்பு- 1 கப் புழுங்கலரிசி - 3 கப் வரமிளகாய் - 5 உப்பு - தேவைக்கு தாளிக்க: எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1/2 கப் பெருங்காயம், மஞ்சள்தூள் - தலா 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - 10 இதழ்கள் ஓரங்களில் ஊற்ற: எண்ணெய்- 6 டேபிள் ஸ்பூன் செய்முறை: அரிசி, பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, 1 மணிநேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து, கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிக்கக் குறிப்பிட்டுள்ள பொருள்களைத் தாளித்து, அரைத்த மாவுடன் கலந்து, சூடான தவாவில் அடையாக ஊற்றவும். ஓரங்களில் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வெந்ததும் எடுக்கவும். அவியலுடன் பரிமாறவும்.
3. மைசூர் தால் வடை
தேவையானவை: மைசூர் பருப்பு - 1 கப் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, புழுங்கலரிசி (மூன்றும் சேர்த்து) - 1 கப் பச்சைமிளகாய்- 3 பெருங்காயம், மஞ்சள்தூள், கொரகொரப்பாக அரைத்த மிளகு** - தலா 1 டீஸ்பூன் பல் பல்லாகக் கீறிய தேங்காய் - 6 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 8 இதழ்கள் உப்பு - தேவைக்கு எண்ணெய்- பொரிக்க செய்முறை: பருப்புகளை ஒன்றாகச் சேர்த்து, 1 மணிநேரம் ஊறவைத்து, வடிக்கவும். பின்னர் உப்பு, பச்சைமிளகாய் சேர்த்துக் கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். எண்ணெயைத் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து கலந்து, சிறிய வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயியில் போடவும். இருபுறமும் திருப்பிவிட்டு, சிவக்கவைத்து எடுத்து, காரச் சட்னி / சாம்பாருடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக