ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
புழுங்கல் அரிசி2கப்.பச்சரிசி1கப். இரண்டையும் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் .அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அடை போல கனமாக தோசைகளாக வார்க்கவும் .சிவக்க விடாமல் வெண்மையாக சிம்மில் வைத்து ஊத்த வேண்டும். ஆறியவடன் அந்த தோசையை சின்ன சின்னதாக கில்லி ஒரு டப்பாவில் வைக்கவும். பிறகு 2 கப் துவரம்பருப்பு குக்கரில் அரை பதத்திற்கு வேக வைக்கவும். ஒரு வாணலியில் சீரகம் 2 ஸ்பூன் எண்ணெய் விடாமல் வறுத்து. மிக்ஸியில் ஜாரில் ஒன்றிரண்டாக அரைக்கவும். 2 கப் தேங்காய் நைசாக துருவி எடுத்துக் கொள்ளவும். குக்கரில் நாம் வேக வைத்த துவரம்பருப்பை. ஜாரில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு. கடுகு .சீரகம் .காய்ந்த மிளகாய் 10.கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும் பின் கில்லி வைத்த அடைபை சேர்த்து நன்றாக கிளறவும். அதில் துவரம் பருப்பு. தேங்காய் துருவல். சீரகப்பொடி அதில் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய் தேவையான அளவு சேர்த்து .எல்லா புறமும் நன்றாக கிளறி விட்டு மிருதுவாக வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.க...