முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

https://kalaireal.blogspot.com

கேசரி போலி

 ஒரு கப் ரவையை வாணலியில் நெய் ஒரு ஸ்பூன் போட்டு வறுக்கவும். ஒரு கப்புக்கு 2 கப் தண்ணீர் விடுங்கள்.தண்ணீர் கொதித்ததும் அதில் கொஞ்சம் கேசரி பவுடர் போடுங்க. நல்லா கொதிக்கும்போது ரவையை அதில் கலந்து விடவும். அடுப்பு தீயை குறைத்து விடுங்கள். அதன்பிறகு .1கப் ரவைக்கு 2சீனீகப் சேர்த்து .அடுப்பில் வைத்து கட்டி இல்லாமல் சிறிதுநேரம் வேகவைக்கவும்.  4 ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய் பவுடர் சேர்த்து. நெய் பிரிந்து வரும்பொழுது கேசரியை இறக்கிடுங்க.பின்னர் மைதா மாவு அதில் கொஞ்சம் தண்ணிர் விட்டு துளி உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும் 15 நிமிஷம் ஊறவும் பின்னர் எலுமிச்சை அளவு மைதா மாவை உருட்டி சப்பாத்திக் கல்லில் வட்டமாக தேய்த்து அதில் கேசரியை ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும் நல்லா மூடிட்டு.மறுபடியும் மாவு தொட்டு ரவுண்ட் சப்பாத்தி மாதிரி செய்து.பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்த்ததும். இந்த கேசரி போலியை எடுத்து தோசைக்கல்லில் போட்டு. இரண்டு பக்கமும் நெய் விட்டு ஒரு தட்டில் எடுத்து அடுக்கி வைக்கவும். கேசரி போலி ரெடி.
சமீபத்திய இடுகைகள்

மலாய் கொஃப்தா மசாலா &கேரட் சாட் மசாலா

  மலாய் கொஃப்தா மசாலா  தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - 2, கேரட் - 2, மஞ் தாள்-Vடீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா - % டீஸ்பூன், எண்ணெய் - 150 மிலி, உப்பு - தேவையான அளவு, சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், பிரட்ஸ்லைஸ் - 4, லைம் ஜூஸ் ஒரு டீஸ்பூன்.  செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் சுத்தம் செய்து வேசு வைத்து தனித்தனியாக மசித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, பிரட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலவையில் சேர்க்கவும். அடுப்பை அணைத்து லைம் ஜூஸ் கலந்து, சோளமாவுடன் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி. எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்- 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன், பட்டை - 2, லவங்கம் - 2, உப்பு, கொத்துமல்லித்தழை - தேவையான அளவு. செய்முறை: பட்டை, லவங்கத்தை ...

பன்னீர்நூடுல்ஸ் ரெடி

 தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு கப், பன்னீர் 100 கிராம், வெங்காய விழுது, தக்காளி விழுது - தலா கால் கப், தயிர் 4 டீஸ்பூன், பச்சைமிளகாய் 1, மஞ்சள்தூள், சீரகத்தூள் தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் தலா அரை டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது, தனியாத்தூள் தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கொதிக்கும் நீரில் நூடுல்ஸை போட்டு பாதியளவு வேகவைத்து நீரை வடிக்கவும். பின் அதை குளிர்ந்த நீரில் அலசி நீரை வடிய விடவும். அகலமான கடாய் ஒன்றில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய பச்சைமிளகாயை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காய விழுது, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி விழுதுஅல்லது தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் பன்னீர் (க்யூப் )சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும். கலவையில் நீர் வற்றி கெட்டியாக வந்ததும் நூடுல்ஸைச் சேர்த்து கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.

காலிஃபிளவர் மஞ்சூரியன்

  காலிஃபிளவர் மஞ்சூரியன் தேவையானவை: காலிஃபிளவர் - 1, பெரிய வெங்காயம் 5, தக்காளி - கால் கிலோ, சோளம மிளகாய்த்தூள் - தலா 1 ஸ்பூன், வெங்காயத்தாள் - 3 (பொடியாக நறுக்கவும்), வினிகர் - 1 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் - 2, இஞ்சி, பூண்டு. விழுது - 1 ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேனை அளவு. செய்முறை: உப்பு கலந்த நீரில் காலிஃபிளவரை 10 நிமிடம் கவிழ்த்து வக்கவும். பின்னர் அதை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிவிடவும். பின்னர் நறுக்கிய காலிஃபிளவரை சேர்த்து 3 நிமிடம் வேகவைத்து நீரை வடிக்கவும். பின்னர் அதை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளியை நீரில் சில நிமிடம் வேகவைத்து தோலுரித்து, அரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி வெங்காயத்தாள், இஞ்சி, பூண்டு விழுது, கீறிய பச்சைமிளகாய், பொரித்த காலிஃபிளவர் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். சோளமாவுடன் சிறிதளவு நீர் விட்டு கரைத்து ஊற்ற...

சம்பங்கி இட்லி & சாமை இட்லி

    சம்பஙகி  இட்லி & சாமை இட்லி தேவையானவை: இட்லி அரிசி ரவை, நைலான் ஜவ்வரிசி தலா ஒரு கப், புளித்த தயிர் - 2 கப், தேங்காய்த்துருவல் - கால் கப், கடுகு ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 5, முந்திரி - 20, கறிவேப்பிலை - 2 கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு, உப்பு, தண்ணீர் - தேவைக்கு. செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி அரிசி ரவை, ஜவ்வரிசி, புளித்த தயிர், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்தை விட சற்று நீர்க்க கரைக்கவும். இந்த மாவை 8 மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் இதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். வாணலியில் கடுகு தாளித்து, முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் தேங்காய்த்துருவலை சேர்த்து கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் லேசாக எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, 12 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.  சாமை இட்லி தேவையானவை: சாமை - 4 கப், உளுந்தம் பருப்பு ஒரு கப வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - செய்முறை: சாமையை மூன்று மணி நேரம் ஊற வைத்து, ...

சோயா பிரியாணி ரெடி

  சோயா பிரியாணி  தேவையானவை: பச்சரிசி - 2 கப், சோயா சங்க்ஸ் - 100 கிராம், பச்சை மிளகாய் - 3, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு - தலா 3, எண்ணெய் - 4 டீஸ்பூன், கொத்துமல்லி மேலே தூவுவதற்கு சிறிது, உப்பு - தேவையான அளவு. செய்முறை: இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் அதில் சோயாவைப் போட்டு, சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் வேக விடவும். வெந்தவுடன் சோயாவை எடுத்து ஆறவைத்து பிறகு நீரை பிழிந்து விடவும்.. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு சில நொடிகள் வதக்கவும். பச்சை வாடை சற்று போனவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சோயாவை அதில் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும். இரண்டு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து, இதனுடன் அரிசி, சோயா கலவை, உப்பு சேர்த்து கிளறிவிட்டு, குக்கரை மூடி வேக விடவும். (ஒரு கப் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு பதிலுக்கு ஒரு கப் தேங்காய்ப்பால் கூட சேர்க்கலாம்) மூன்று விசில் வந்தவுடன் இறக்...

பனீர் கோப்தா பிரியாணி &கோதுமை ரவை-மூலிகை பிரியாணி & கோதுமை ரவை-மூலிகை பிரியாணி

  பனீர் கோப்தா பிரியாணி தேவையானவை 3 பட்டை, கிராம்பு, ஏலக்காய், அரிசி ஒரு கப், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பனீர்த் துருவல் அரை கப், மிளகு, சீரகப்பொடி ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 4, எலுமிச்சைச் - சாறு ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் தலா அரை டீஸ்பூன், பிரியாணி இலை - தாளிக்க, கொத்துமல்லித்தழை சிறி தளவு, சோள மாவு, உப்பு, எண்ணெய்-தேவையான அளவு. செய்முறை பனீர்த் துருவலுடன் உப்பு, மிளகு, சீரகப் பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசறவும். பின்னர் சோள மாவு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், 'பனீர் கோப்தா' தயார்! அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மீதமுள்ள பச்சை மிளகாய்த் துண்டுகள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, அரிசியை களைந்து சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு, முக்கால் பதம் வேகவிடவும். பின்னர் பனீர் கோப்தாக்களை சேர்த்து கலந...