முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

https://kalaireal.blogspot.com

ரசகுல்லா

 ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
சமீபத்திய இடுகைகள்

சில்லி பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க

  மைதா மாவு ஒரு கப். நாலு ஸ்பூன் ரவா பவுடர். அரை டீஸ்பூன் ஈஸ்ட் 100 கிராம் தண்ணீரில்  ஊற வையுங்க. கரைந்ததும். அந்த ஈஸ்ட் எடுத்து மைதா மாவுடன் சேர்த்து. உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து .மைதா மாவை பரோட்டா போடும் பதத்திற்கு பிசைந்து.  5 நிமிஷம் ஊற வையுங்க. பிறகு ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக மாவை எடுத்து பரோட்டா செய்து வையுங்க .லேயர் லேயராக வரலைன்னா நீங்க கவலைப்பட வேண்டாம். ஓரளவுக்கு சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை .அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் விடுங்க நம்ம செய்து வைத்திருக்க பரோட்டாவை. அந்த எண்ணெய் காய்ந்ததும் அதில் பரோட்டாவை போட்டு  அடிக்கி வச்சிருங்க. ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணைய் விடுங்க அதுல சோம்பு பட்டை 1 குடை மிளகாயை கீரி போடுங்க.மூன்று பெரிய வெங்காயத்தை நைசாக நறுக்கிப் போடுங்கள் 2 ஸ்பூன் சில்லி சாஸ் .2 ஸ்பூன் டொமேட்டோ சாஸ். அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள். கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் .சிறிதளவு உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க. பிறகு பரோட்டாவை எடுத்து கையால் உடைச்சு மசாலாவுடன் கலந்து 10 நிமிடம் மூடி வையுங்கள்.பத்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் க...

காலிஃப்ளவர் மசாலா

  காலிஃப்ளவரை சுத்தம் செப்து எடுத்து வையுங்க. உருளைக்கிழங்கு தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி வையுங்க  அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து நாலு ஸ்பூன்  எண்ணைய் விடுங்க காய்ததும்  பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து.  வெங்காயம் 2 தக்காளி 2 முந்திரிபருப்பு இவற்றை  மிக்சியில் அரைத்து அதில் கலந்து பின் காலிபிளவர் .உருளைக்கிழங்கு. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத்தூள் . அதில் கலந்து கொஞ்சம் உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு .குக்கரில் 2 விசில் வைத்து. 10 நிமிடம் கழித்து. குக்கரின் மூடியைத் திறந்து.  உருளைக்கிழங்கு நன்றாக மசித்து விடவும் . பின் எண்ணைய் பிரியும்போது ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதன் மேலே இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கமகம காலிஃப்ளவர் மசாலா ரெடி பிரியாணி.சப்பாத்தி .நாண்.பூரி இது எல்லாத்துக்கும் சேர்த்து  சாப்பிடலாம் .

தக்காளி தால்

தக்காளி தால்  மைசூர் தால் ஒரு கப். குக்கர்ல நல்லா மலர  வேக வைக்கவும் .வாணலியில் எண்ணைய் விட்டு.காய்ந்ததும்  கடுகு. சீரகம் .கறிவேப்பிலை. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டீஸ்பூன். பச்சை மிளகாய் 3  போடுங்க மிளகாய்த்தூள்1  டேபிள்ஸ்பூன். தக்காளி 5 கொஞ்சம் பெரிய துண்டுகளாக கட் செய்து  வதக்கி பருப்புடன் சேருங்க. இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு. அரை டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வையுங்க. சூப்பரான  தக்காளி தால் ரெடி .தோசை. இட்லி. சப்பாத்தி. பூரி எல்லாத்துக்குமே சூப்பரான காம்பினேஷன்.

Hindi consonants with English

 

கோதுமை மாவு கொத்து பரோட்டா

  கோதுமை மாவு கொத்து பரோட்டா  கோதுமை மாவு தேவையான அளவு. கோதுமை மாவை சப்பாத்திகளாக செய்து வையுங்க.பிறகு பின்ஸ்.கேரட். முட்டைகோஸ். குடைமிளகாய். வெங்காயம் இவை அனைத்தையும்.  பொடியாக நறுக்கவும்.     வாணலியை அடுப்பில் வைத்து. அதில் பட்டை. சோம்பு .கரம் மசாலா. பிளைன் மிளகாய்த்தூள். தேவையான அளவு இவை அனைத்தையும் வதக்கிக் கொள்ளவும். பின்   வெங்காயம்.  மிளகாய்.பிறகு எல்லா காய்கறிகளையும்  போட்டு  வதக்கி. அதில்  டொமேட்டோ சாஸ் இரண்டு ஸ்பூன். சில்லி சாஸ் ஒரு ஸ்பூன். உப்பு இவை அனைத்தையும் வதக்கவும். நாம் செய்து வைத்திருக்கும் சப்பாத்திகளை  நறுக்கி . காய்கறி கலவையுடன் சேர்த்து கலந்து விடவும் .அடுப்பை நிறுத்திவிட்டு.இரண்டு தோசை திருப்பி வைத்து 20 நிமிடம்  கொத்த வேண்டும்.  பிறகு அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும். கொத்து பரோட்டா ரெடி. தயிர்  பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

பாரம்பரிய மண் பானை சமையல் இருந்து opos ஆரோக்கியமான எப்படி?

  பாரம்பரிய மண் பானை சமையலில் இருந்து Opos எப்படி ஆரோக்கியமானது?  இதுபோல நிறைய பேர் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க ரொம்ப ஈசியா சொல்லனும்னா .நம்ம முன்னாடி எல்லாம்  ஒரு பெரிய குக்கரில் .உள்ளே வச்சு எடுக்க .4 அடிக்கு ஒரு கேரியர் மாதிரி பாத்திரம் அதையும் சேர்த்து தான் கொடுப்பாங்க. இப்ப மண்பாண்டங்களில் செய்யக்கூடிய குக்கர் கூட கிடைக்கிறது  அதில் எப்படி சமையல் செய்யலாம்  தெரியுமா? நம்மளும் தெரிஞ்சுக்கலாம் வாங்க . இப்ப சாம்பார் காய்கறிகளை ரெடி செய்து முதல் அடுக்கில் வைத்துவிட்டு ஒரு ஸ்பூன் சாம்பார்த்தூள்  வெங்காயம்.  பச்சை மிளகாய்.  துவரம் பருப்பு .உப்பு .புளித் தண்ணீர். ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு .ஒரு அடுக்கு ரெடி.  இரண்டாவது அடுக்கில் பொரியல்.  உப்பு .காரம் சேர்த்து .அரை டம்ளர் தண்ணீர் விடவும் இரண்டாவது அடுக்கு ரெடி .மூன்றாவது அடிக்கு கூட்டு செய்வதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி அதில் உப்பு.  காரப்பொடி .பருப்பு தேங்காய் பேஸ்ட் .சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்றாவது அடிக்கு ரெடி.  நாலாவதுஅடுக்கில்  தேவையான காய்கறிகள் உருளைக்கிழங்கு உங்...