மிளகாய் 6. கடலைப்பருப்பு 1 டீஸ்பூன். மல்லி 2 டீஸ்பூன். வறுத்து மிக்ஸியில் நைஸாக பொடி பண்ணி வச்சிக்கோங்க. வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு. உளுத்தம்பருப்பு. காய்ந்த மிளகாய் சேர்த்து. தக்காளி-2 கத்தரிக்காய் 3 நைசாக அதில் நறுக்கி சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் வெந்ததும் அந்த கத்தரிக்காயை நைசாக மசித்து விடவும். புளித்தண்ணீர் ஒரு கப் அதில் சேருங்க . பொடி செய்து வைத்திருக்கும் பவுடர். கொஞ்சம் உப்பு சேர்க்கவும் 15 நிமிடம் கொதிக்க விடுங்க. க கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.கொஸ்து ரெடி. இட்லி .தோசை. உப்புமா. பொங்கல் இது எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். & நிறைய பேர் கேட்கிற கேள்வி என்னன்னா?சமையலுக்கு ரீஃபைண்ட் ஆயில் யூஸ் பண்ணலாமா கேக்குறாங்க? செக்கு எண்ணெய் வாங்கி அதை நம்ம பயன்படுத்துவதுதான் நல்லது சொல்லுவேன். அது தரமானதாக இருக்கும் . சிலருக்கு அது பிடிக்காது. அதனால ஒரே மாதிரியாக எண்ணைய் வாங்காமல் வேற வேற பிராண்டட் பார்த்து வாங்கி...
கத்தரிக்காய் வத்தக்குழம்பு தேவையானவை: கத்தரிக்காய் - 10, பூண்டு - 6 பற்கள் (இடிக்கவும்), வெங்காயம், தக்காளி தலா ஒன்று, உப்பு -தேவையான அளவு, மஞ்சள்பொடி - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி, தனி மிளகாய்ப்பொடி - தலா 2 டீஸ்பூன், புளிக்கரைசல் - அரை கப், வெல்லம் - சிறிய கட்டி, வெந்தயப்பொடி (மேலே தூவ) - ஒரு சிட்டிகை. தாளிக்க: நல்லெண்ணெய் - 50 கிராம் + 10 மில்லி, கடுகு, பெருங்காயம், வெந்தயம் - சிறிதளவு, சோம்பு - கால் டீஸ்பூன். செய்முறை : வாணலியில் 50 கிராம் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை தாளித்து, நறுக்கிய கத்தரிக்காய், இடித்த பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகப் பிரட்டி, கொதி வரவிடவும். கடைசியாக வெல்லம் சேர்த்து இறக்கவும். பொடித்த சுண்டைக்காய் வத்தக்குழம்பு தேவையானவை காய்ந்த கண்டைக்காய் - 10, புளிக்கரைசல் முக்கால் சுப், உப்பு - தேவையான அளவு, மஞ்சள்பொடி, சாம்பார் பொடி, மிளகாய்ப்பொடி தலா 2 டீஸ்பூன், வெங்காயம் -ஒன்று (நறுக்கவும்). - 50 கிராம் + 10 மில்லி, கடுகு, தாளிக்க: நல்லெண்ணெய் பெருங்காயம்,...