முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

https://kalaireal.blogspot.com

பூண்டு தக்காளி சட்னி எப்படி செய்வது வாங்க

  வாணலியை அடுப்பில் வையுங்க. எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு காய்ந்ததும்.10 காய்ந்த மிளகாய்.2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு .பூண்டு 15 பல். தக்காளி-3 .உப்பு தேவையான அளவு  இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு தட்டில் ஆறவைக்கவும்.பிறகு  மிக்ஸி ஜாரில் நைஸாக அரைக்கவும் சூப்பரான பூண்டு தக்காளி சட்னி ரெடி
சமீபத்திய இடுகைகள்

பூண்டு வெங்காயம் அரைத்து விட்ட கார குழம்பு

  கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விடுங்க.காய்ந்ததும் மிளகு சீரகம் தலா 2 ஸ்பூன். உளுத்தம்பருப்பு.துவரம் பருப்புதலா1டீஸ்பூன்.கறிவேப்பிலை ஒரு சிறிதளவு வெந்தயம் அரை டீஸ்பூன் மிளகாய் 5. இவை அனைத்தையும் நன்றாக வறுத்து ஆற வைத்து.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைக்கவும். சிறிதளவு புளி ஊற வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் 3 கரண்டி விட்டு எண்ணெய் காய்ந்ததும். கடுகு.வெந்தயம். சீரகம்தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை சேர்த்து வதக்கவும அதனுடன் வெங்காயம் உரித்து சுத்தம் செய்து ஒரு கப்.பூண்டு 2 கப். தக்காளி2 நன்றாக கழுவி  நைஸாக அரிந்து. அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து ஒரு கப் எடுத்து அதில் சேர்த்து. சிறிதளவு உப்பு. வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்றாக 15 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சூப்பரான வெங்காயம் பூண்டு அரைத்துவிட்ட குழம்பு ரெடி. இட்லி. தோசை. சாதம். கோதுமை தோசை. ரவா தோசை. கல் தோசை இவை அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.

கார்லிக் நாண்

  நாண்  செய்வது எப்படினு பார்க்கலாம்.2 கப்  மைதா  சிறிதளவு ஈஸ்ட் . இப்ப அரை ஸ்பூன் ஈஸ்ட் எடுத்து 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு மைதாமாவில் ஈஸ்ட் (கரைந்ததும்) தேவையானளவு தண்ணீர் சேர்த்து  சப்பாத்தி மாவுப்போல் பிசைந்து.(சற்று தளர்வாக)அதன் மேல் எண்ணைத்தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும். இப்போது   தோசைக்கல் அடுப்பில் வைத்து கல் காயட்டும். அதற்குள் மாவுவை சப்பாத்திப்போல் தேய்த்து அதன்மேல் 2 பூண்டு நைசாக தூவி.சிறிது மல்லித்தழை தூவி  மறுபடியும் சப்பாத்திக்கட்டையால் தேய்த்து. தோசைக்கல்லில் போடவும்.அதில் 1ஸ்பூண்  வெண்ணைய் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து .ஒரு தட்டில் வைக்கவும். இப்ப கார்லிக் நாண் ரெடி. பட்டர் மட்டும் போட்டு செய்தால் அது பட்டர் நாண். அடுத்து பண்ணீர் பட்டர் மசாலா எப்படி செய்யனும் என பார்க்கலாம்.

கொத்துமல்லி பிரியாணி தயார்..

 தேவையானவை: பாசுமதி அரிசி ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - 2. வெங்காயம் - 1, எண்ணெய் 2 டேபிள்ஸ்யூன், தேங்காய்ப்பால் - அரை கட்ட கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பிரியாணி இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. அரைக்க: . பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு. 6.தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன். பட்டை லவங்கம் - தலா 2. செய்முறை: அரைக்க கொடுத்தவற்றை நைஸாக அரைக்கவும். அரிசியைக் களைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தோல் உரித்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா மற்றும் தூள் வகைகள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் தேங்காய்ப்பால் ஊற்றி மீதத்திற்கு நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க துவங்கியதும் அரிசி சேர்த்து கலந்து விடவும். மீண்டும் கொதிக்க துவங்கியதும் மூடி சிறு தீயில் வைத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சு...

விநாயகர் சதுர்ததி மோதகம்....& காரக் கொழுக்கட்டை

   விநாயகர் சதுர்ததி மோதகம்.... & காரக் கொழுக்கட்டை 4 ஸ்பூன் கடலை பருப்பு.  குக்கரில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு .அரை பதத்துக்கு வேக விடுங்க. வெயிட் போடாமல் ஒரு அஞ்சு நிமிஷம் வெச்சாலே போதும் வெந்த பருப்பை ஆறியதும் மிக்சியில் நைசாக அடிச்சுருங்க.  தேங்காய் 2 கப்.  வெல்லம் 2 கப்.  எல்லாம் சுத்தம் பண்ணி எடுத்து வச்சுக்குங்க. அடுப்பில் அடி கனமாக உள்ள கடாய்  வையுங்க. வெச்சிட்டு வெள்ளம் கொஞ்சம் தண்ணி விட்டு கரைந்ததும். தேங்காய்  சேருங்க .கொஞ்சம் நல்ல திக்கானதும் அடுப்பை நிறுத்திட்டு இந்த கடலை பருப்பு சேர்த்து நல்லா கிண்டுங்க‌ அதுக்கப்புறமா அடுப்பு பத்த வைச்சு.நல்லா திரண்டு வரும் போது.அதில்10கிராம் ஏலக்காய்த் தூள்.2 ஸ்பூன் நெய் விடுங்க.சுருண்டு சீக்கிரமேபூரணம் ரெடியாயிடும் பூரணம்.ரெடியானதும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சிருங்க.பிறகு நம்ம மாவு ரெடி பண்ணனும் ஒரு பாத்திரத்தில் ஒன்னேகால் டாம்ளருக்கு தண்ணீர் ஊற்றி நல்லா கொதி வரும்போது. அரை உப்பு போடுங்க.1 ஸ்பூன் நல்லெண்ணைய் விடுங்க.அடுப்பைஆஃப் பண்ணிட்டு‌‌.ஒரு டம்ளர் பச்சரிசி மாவை அதில் கொஞ்சம் கொஞ்சம...

மேதி டேப்ளா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்

  வெந்தயக்கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தது மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்  அரை ஸ்பூன்  கோதுமை மாவு 250 கிராம் கடலைமாவு 2 டேபிள்ஸ்பூன் எல்லாவற்றையும் லேசாக சூடாக்கவும் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் அதிலும் அரைக் கப் தயிர் நாம் அறிந்து வைத்திருக்கும் வெந்தியக்கீரை தேவையான அளவு சீனி 2 ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும் 15 நிமிடம் கழித்து சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக செய்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும். தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு  அதன் மேல் நெய் தடவி பரிமாறலாம் சைடிஷ் வந்து நிறைய நமது பிளாக்கில் நிறைய போஸ்ட் போட்டிருக்கேன்.பன்னீர் பட்டர் மசாலா. கோபி மசாலா.  முட்டைகோஸ் மசாலா.நிறைய.... போட்டு இருக்கேன் நிறைய நிறைய சொல்லிட்டே போகலாம்.  எது உங்களுக்கு பிடிக்குமோ  நீங்க டைப் பண்ணினால்வரும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க பண்ணிக்கலாம் இப்போ மேதி டேபிளா ரெடி. 

டபுள் பீன்ஸ் மசாலா

  டபுள் பீன்ஸ் 1கப் பட்டாணி 1 கப் உப்பு போட்டு வேக வையுங்கள். குக்கரை அடுப்பில் வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணைய் விடுங்க.  சீரகம். கருவேப்பிலை. கடுகு .2   வெங்காயம். தக்காளி-2 நைஸாக அரிந்து போடுங்க . வேகவைத்து இருக்கக்கூடிய டபுள் பீன்ஸ் .பட்டாணி இரண்டையும் அதில் போடுங்க. மிக்ஸி ஜாரில் இஞ்சி. பூண்டு.  மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். மல்லித் தூள் ஒரு ஸ்பூன். முந்திரிபருப்பு 10 நைஸாக அரைத்து அதில் சேர்த்திடுங்க. பிறகு கொஞ்சம் உப்பு .தண்ணீர் சேர்த்து .மிதமான தீயில் நல்லா சுருள வதக்குங்கள்  எண்ணைய் பிரிந்து வரும்போது இறக்குங்க.டபுள் பீன்ஸ் மசாலா ரெடி நாண். .சப்பாத்தி. ஃப்ரைட் ரைஸ் .பூரி. எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம்