முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

https://kalaireal.blogspot.com

காலிஃப்ளவர் மசாலா

  காலிஃப்ளவரை சுத்தம் செப்து எடுத்து வையுங்க. உருளைக்கிழங்கு தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி வையுங்க  அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து நாலு ஸ்பூன்  எண்ணைய் விடுங்க காய்ததும்  பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து.  வெங்காயம் 2 தக்காளி 2 முந்திரிபருப்பு இவற்றை  மிக்சியில் அரைத்து அதில் கலந்து பின் காலிபிளவர் .உருளைக்கிழங்கு. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத்தூள் . அதில் கலந்து கொஞ்சம் உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு .குக்கரில் 2 விசில் வைத்து. 10 நிமிடம் கழித்து. குக்கரின் மூடியைத் திறந்து.  உருளைக்கிழங்கு நன்றாக மசித்து விடவும் . பின் எண்ணைய் பிரியும்போது ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதன் மேலே இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கமகம காலிஃப்ளவர் மசாலா ரெடி பிரியாணி.சப்பாத்தி .நாண்.பூரி இது எல்லாத்துக்கும் சேர்த்து  சாப்பிடலாம் .

Atai dish is ready

       Atai 200 grams of gram flour, 200 grams of urad dal, 100 grams of urad dal, 250 grams of idli rice,  250 grm soak it for 3 hours, add 30 pcs of red chilies and grind it finely, soak it for 4 hours and grind it in a mixer, mix everything together, add salt as required, add onion, green chilies, 2 ginger, chop it finely, mix it in flour, pour it like dosa and eat it with coconut chutney, the Atai dish is ready
🍲 இன்றைய கிச்சன் டிப்ஸ் தக்காளி சாம்பாரை சுவையாக செய்ய 👉 சிறிது வெந்தயம், பூண்டு சேர்த்துப் பச்சடி மாதிரி வறுத்து போடுங்க. சுவை double ஆகும் 😋 🛒 இன்றைய Amazon Offer 👉 ஸ்டீல் குக்கர் – ₹899 மட்டும்! 💡 இன்னும் பல Cooking Tips & Offers பெற 👉 Follow செய்யுங்கள் Kalaireal360 All in All 🔔 Follow the Kalaireal360  All in All channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbB6fqB1CYoQqgy0md0E

மேதி டேப்ளா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்

  வெந்தயக்கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தது மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்  அரை ஸ்பூன்  கோதுமை மாவு 250 கிராம் கடலைமாவு 2 டேபிள்ஸ்பூன் எல்லாவற்றையும் லேசாக சூடாக்கவும் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் அதிலும் அரைக் கப் தயிர் நாம் அறிந்து வைத்திருக்கும் வெந்தியக்கீரை தேவையான அளவு சீனி 2 ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும் 15 நிமிடம் கழித்து சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக செய்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும். தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு  அதன் மேல் நெய் தடவி பரிமாறலாம் சைடிஷ் வந்து நிறைய நமது பிளாக்கில் நிறைய போஸ்ட் போட்டிருக்கேன்.பன்னீர் பட்டர் மசாலா. கோபி மசாலா.  முட்டைகோஸ் மசாலா.நிறைய.... போட்டு இருக்கேன் நிறைய நிறைய சொல்லிட்டே போகலாம்.  எது உங்களுக்கு பிடிக்குமோ  நீங்க டைப் பண்ணினால்வரும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க பண்ணிக்கலாம் இப்போ மேதி டேபிளா ரெடி. 

தால் பூரண்எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

  தால் பூரண் சப்பாத்தி சூப்பராக இருக்கும்.  எல்லாருக்கும் பிடிக்கும். எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க. கோதுமை மாவு ஒரு கப். மைதா மாவு ஒரு கப். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு  போல் பிசைந்து வைக்கவும். கடலைப்பருப்பு ஒரு கப். குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் ஜாரின் கால் கப் சீனி. 10 ஏலக்காய் சேர்த்து  அரைத்துக்கொள்ளவும இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் .பிசைந்து வைத்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை எடுத்து சப்பாத்திகளாக தேய்த்து. அதன் நடுவில் இந்த பருப்பு உருண்டை வைக்கவும். அதை மூடி கோதுமை மாவை தொட்டு மறுபடியும் சப்பாத்திகளாக தேய்க்கவும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து. சப்பாத்தியை போட்டு எடுக்கவும்.அதன் மேல் நெய் தடவி அடுக்கவும். தால் பூரண் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள ஜாம். இனிப்புச் சட்னி .உங்களுக்கு விருப்பப்பட்ட குருமா சேர்த்து சாப்பிடலாம் .அடுத்து இனிப்புச் சட்னி எப்படி பண்றதுனு தெரிஞ்சிக்கலாம்.

இனிப்பு சட்னி செய்யலாம்

  பச்சை மிளகாய் 3. புளி சிறிதளவு .உப்பு தேவையான அளவு  பேரிச்சை 25 கிராம். (அரைக்க முடிவிவ்லை என்றால் லயன்டேட்ஸ் சிரப் உபயோகிக்கலாம் ). வெல்லம் இனிப்புக்கு தேவையான அளவு.  முந்திரி  10 இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் ஒருவாரம் வரை  கெட்டுப் போகாமல் இருக்கும் ப்ரிஜ்ல் வைத்து உபயோகம் பண்ணுங்க.

பாதாம் பச்சடி

 பாதம் பச்சடி பாதாம் பருப்பு 20. பூண்டு 5. புளிக்காத தயிர் ஒரு கப். பச்சை மிளகாய் 2 (காரத்திற்கு ஏற்ப) கொத்தமல்லி சிறிதளவு. சர்க்கரை சிறிதளவு (1 டீஸ்பூன்)சீரகத்தூள் அரை டீஸ்பூன். பாதாம்பருப்பு 20 பாதாமை ஊற வைத்து ஊறவைத்து தோலுரித்து விட்டு.ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு (வேகவைத்து) அதில் பச்சை மிளகாய். தயிர். கொத்தமல்லித்தழை. சர்க்கரை.தோலுரித்த பாதாம் பருப்பு இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து அதில் தேவையான அளவு உப்பு அரை டீஸ்பூன் சீரகத்தூள் கலந்து வைக்கவும் பாதாம் பூண்டு பச்சடி ரெடி. சப்பாத்தியுடன் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 2வாரம் வரை சாப்பிடலாம்.

பூண்டு தக்காளி சட்னி எப்படி செய்வது வாங்க

  வாணலியை அடுப்பில் வையுங்க. எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு காய்ந்ததும்.10 காய்ந்த மிளகாய்.2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு .பூண்டு 15 பல். தக்காளி-3 .உப்பு தேவையான அளவு  இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு தட்டில் ஆறவைக்கவும்.பிறகு  மிக்ஸி ஜாரில் நைஸாக அரைக்கவும் சூப்பரான பூண்டு தக்காளி சட்னி ரெடி

பூண்டு வெங்காயம் அரைத்து விட்ட கார குழம்பு

  கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விடுங்க.காய்ந்ததும் மிளகு சீரகம் தலா 2 ஸ்பூன். உளுத்தம்பருப்பு.துவரம் பருப்புதலா1டீஸ்பூன்.கறிவேப்பிலை ஒரு சிறிதளவு வெந்தயம் அரை டீஸ்பூன் மிளகாய் 5. இவை அனைத்தையும் நன்றாக வறுத்து ஆற வைத்து.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைக்கவும். சிறிதளவு புளி ஊற வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் 3 கரண்டி விட்டு எண்ணெய் காய்ந்ததும். கடுகு.வெந்தயம். சீரகம்தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை சேர்த்து வதக்கவும அதனுடன் வெங்காயம் உரித்து சுத்தம் செய்து ஒரு கப்.பூண்டு 2 கப். தக்காளி2 நன்றாக கழுவி  நைஸாக அரிந்து. அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து ஒரு கப் எடுத்து அதில் சேர்த்து. சிறிதளவு உப்பு. வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்றாக 15 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சூப்பரான வெங்காயம் பூண்டு அரைத்துவிட்ட குழம்பு ரெடி. இட்லி. தோசை. சாதம். கோதுமை தோசை. ரவா தோசை. கல் தோசை இவை அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.

கார்லிக் நாண்

  நாண்  செய்வது எப்படினு பார்க்கலாம்.2 கப்  மைதா  சிறிதளவு ஈஸ்ட் . இப்ப அரை ஸ்பூன் ஈஸ்ட் எடுத்து 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு மைதாமாவில் ஈஸ்ட் (கரைந்ததும்) தேவையானளவு தண்ணீர் சேர்த்து  சப்பாத்தி மாவுப்போல் பிசைந்து.(சற்று தளர்வாக)அதன் மேல் எண்ணைத்தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும். இப்போது   தோசைக்கல் அடுப்பில் வைத்து கல் காயட்டும். அதற்குள் மாவுவை சப்பாத்திப்போல் தேய்த்து அதன்மேல் 2 பூண்டு நைசாக தூவி.சிறிது மல்லித்தழை தூவி  மறுபடியும் சப்பாத்திக்கட்டையால் தேய்த்து. தோசைக்கல்லில் போடவும்.அதில் 1ஸ்பூண்  வெண்ணைய் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து .ஒரு தட்டில் வைக்கவும். இப்ப கார்லிக் நாண் ரெடி. பட்டர் மட்டும் போட்டு செய்தால் அது பட்டர் நாண். அடுத்து பண்ணீர் பட்டர் மசாலா எப்படி செய்யனும் என பார்க்கலாம்.

கொத்துமல்லி பிரியாணி தயார்..

 தேவையானவை: பாசுமதி அரிசி ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - 2. வெங்காயம் - 1, எண்ணெய் 2 டேபிள்ஸ்யூன், தேங்காய்ப்பால் - அரை கட்ட கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பிரியாணி இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. அரைக்க: . பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு. 6.தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன். பட்டை லவங்கம் - தலா 2. செய்முறை: அரைக்க கொடுத்தவற்றை நைஸாக அரைக்கவும். அரிசியைக் களைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தோல் உரித்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா மற்றும் தூள் வகைகள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் தேங்காய்ப்பால் ஊற்றி மீதத்திற்கு நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க துவங்கியதும் அரிசி சேர்த்து கலந்து விடவும். மீண்டும் கொதிக்க துவங்கியதும் மூடி சிறு தீயில் வைத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சு...

விநாயகர் சதுர்ததி மோதகம்....& காரக் கொழுக்கட்டை

   விநாயகர் சதுர்ததி மோதகம்.... & காரக் கொழுக்கட்டை 4 ஸ்பூன் கடலை பருப்பு.  குக்கரில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு .அரை பதத்துக்கு வேக விடுங்க. வெயிட் போடாமல் ஒரு அஞ்சு நிமிஷம் வெச்சாலே போதும் வெந்த பருப்பை ஆறியதும் மிக்சியில் நைசாக அடிச்சுருங்க.  தேங்காய் 2 கப்.  வெல்லம் 2 கப்.  எல்லாம் சுத்தம் பண்ணி எடுத்து வச்சுக்குங்க. அடுப்பில் அடி கனமாக உள்ள கடாய்  வையுங்க. வெச்சிட்டு வெள்ளம் கொஞ்சம் தண்ணி விட்டு கரைந்ததும். தேங்காய்  சேருங்க .கொஞ்சம் நல்ல திக்கானதும் அடுப்பை நிறுத்திட்டு இந்த கடலை பருப்பு சேர்த்து நல்லா கிண்டுங்க‌ அதுக்கப்புறமா அடுப்பு பத்த வைச்சு.நல்லா திரண்டு வரும் போது.அதில்10கிராம் ஏலக்காய்த் தூள்.2 ஸ்பூன் நெய் விடுங்க.சுருண்டு சீக்கிரமேபூரணம் ரெடியாயிடும் பூரணம்.ரெடியானதும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சிருங்க.பிறகு நம்ம மாவு ரெடி பண்ணனும் ஒரு பாத்திரத்தில் ஒன்னேகால் டாம்ளருக்கு தண்ணீர் ஊற்றி நல்லா கொதி வரும்போது. அரை உப்பு போடுங்க.1 ஸ்பூன் நல்லெண்ணைய் விடுங்க.அடுப்பைஆஃப் பண்ணிட்டு‌‌.ஒரு டம்ளர் பச்சரிசி மாவை அதில் கொஞ்சம் கொஞ்சம...

மேதி டேப்ளா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்

  வெந்தயக்கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தது மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்  அரை ஸ்பூன்  கோதுமை மாவு 250 கிராம் கடலைமாவு 2 டேபிள்ஸ்பூன் எல்லாவற்றையும் லேசாக சூடாக்கவும் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் அதிலும் அரைக் கப் தயிர் நாம் அறிந்து வைத்திருக்கும் வெந்தியக்கீரை தேவையான அளவு சீனி 2 ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும் 15 நிமிடம் கழித்து சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக செய்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும். தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு  அதன் மேல் நெய் தடவி பரிமாறலாம் சைடிஷ் வந்து நிறைய நமது பிளாக்கில் நிறைய போஸ்ட் போட்டிருக்கேன்.பன்னீர் பட்டர் மசாலா. கோபி மசாலா.  முட்டைகோஸ் மசாலா.நிறைய.... போட்டு இருக்கேன் நிறைய நிறைய சொல்லிட்டே போகலாம்.  எது உங்களுக்கு பிடிக்குமோ  நீங்க டைப் பண்ணினால்வரும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க பண்ணிக்கலாம் இப்போ மேதி டேபிளா ரெடி. 

டபுள் பீன்ஸ் மசாலா

  டபுள் பீன்ஸ் 1கப் பட்டாணி 1 கப் உப்பு போட்டு வேக வையுங்கள். குக்கரை அடுப்பில் வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணைய் விடுங்க.  சீரகம். கருவேப்பிலை. கடுகு .2   வெங்காயம். தக்காளி-2 நைஸாக அரிந்து போடுங்க . வேகவைத்து இருக்கக்கூடிய டபுள் பீன்ஸ் .பட்டாணி இரண்டையும் அதில் போடுங்க. மிக்ஸி ஜாரில் இஞ்சி. பூண்டு.  மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். மல்லித் தூள் ஒரு ஸ்பூன். முந்திரிபருப்பு 10 நைஸாக அரைத்து அதில் சேர்த்திடுங்க. பிறகு கொஞ்சம் உப்பு .தண்ணீர் சேர்த்து .மிதமான தீயில் நல்லா சுருள வதக்குங்கள்  எண்ணைய் பிரிந்து வரும்போது இறக்குங்க.டபுள் பீன்ஸ் மசாலா ரெடி நாண். .சப்பாத்தி. ஃப்ரைட் ரைஸ் .பூரி. எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம்

கோதுமை ரவை உப்புமா ரெடி.

   கோதுமை ரவையை .ஒரு கப் எடுத்து லேசாக வறுத்து கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைக்கவும். (ரொம்ப நாளாக  சொல்லணும்னு தோணுச்சு. இப்ப நான் அதிகம் பயன்படுத்துவது மண் பாத்திரங்கள்தான்.  குக்கர்.இட்லிபாணை. பிரஷர் பன். டம்ளர் நிறைய பாத்திரங்கள் கிடைக்கிறது. மைக்ரோ ஓவனில் வைத்து சமைக்கிறதுக்கு வசதியா இருக்கு. சுவையும் மாறாமல் இருக்கும். சரி நாம்ம இப்ப  சமையலுக்கு வருவோம்.) குக்கரை அடுப்பில் வையுங்கள் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு. கடலைப்பருப்பு. இஞ்சி. காய்ந்த மிளகாய்   10 . வெங்காயம் ஒரு கப் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.  பிறகு கேரட் .உருளைக்கிழங்கு. பட்டாணி சேர்த்து வதக்கி. பிறகு கோதுமை ரவையை அதில் சேர்த்து நன்றாக வதக்குங்கள். ஒருகப் ரவைக்கு இரண்டரை கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து.குக்கர் மூடியை எடுத்து  மூடவும். 3 விசில் வைத்து இறக்கவும். பத்து நிமிடம் கழித்து. மூடியைத் திறந்து விட்டு அதில் .கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி விட்டு இருக்குங்க. கோதுமை ரவை உப்புமா ரெடி. தேங்காய் சட்னி .தக்காளி சட்னி வைத்து சாப்பிடலாம்.

அதிரசம் எப்படி

  பச்சரிசி ஒரு கிலோ தண்ணீர் விட்டு அலசி. கொஞ்ச நேரம் அந்த ஈரம் வெளில போற அளவுக்கு கொஞ்ச நேரம் வெள்ளைத்துணியில் போடுங்க.பிறகு ஒரு பாத்திரத்தில் மாத்துஙக. மெஷின்ல். அப்படி இல்லேன்னா நம்ம மிக்ஸியில் போட்டு அரைத்துங்க. அரைக்கும் போது கொரகொரப்பாக இருக்கலாம். அப்பதான் நல்லா இருக்கும்.உங்க விருப்பம்அரைத்துமுடிஞ்சதும்வெறும் வாணலியில் லேசாக வருத்துக்கனும். வெல்லம் 400 கிராம் இனிப்பு அதிகம் தேவைன்ன 500 கிராம். சுத்த பண்ணிட்டு பாகு காய்ச்சி.நல்லா கெட்டியானதும்.ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து அடுப்பில் இருக்கும் அந்த வெல்லப்பாகு கொஞ்சம் எடுத்து.அந்த கிண்ணத்தில் ஒரு துளி போடுங்க.அதுல விட்டத்துக்கு அப்புறம் ஒரு ரெண்டு செகண்ட் வெயிட் பண்ணுங்க அதுக்கப்புறம் கையில எடுத்து உருண்டு பந்து மாதிரி அது உருண்டு வரும் அந்த வெல்லப்பாகை இறக்கி விட்டு நீங்க மாவு பண்ணி வச்சிருக்கும். மாவை எடுத்து வெல்லப்பாகுடன் ஏலக்காய் 20 கிராம்.சேர்த்து நல்ல கிளறி விடுங்க. அப்படியே நல்ல கிளறி விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைத்துவிடுங்கள். அதிரசமாவு ரெடி. அந்த அதிரச மாவை ஒரு நாள் நல்லா ஊறவிடுங்க.ஒரு நாளைக்கு பிறகு ...

பயறு லட்டு

  பயத்தம்பருப்பு 500கிராம்.பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் நைசாக அரைக்கவும். அதில் குழவுசீனீ 1கிலோ.முந்திரி 50 கிராம். ஏலக்காய் 10 கிராம். இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில்  ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் நைசாக அரைக்கவும். அதில் சேர்த்து அதனுடன் ஏலக்காய் பவுடர் சேர்த்து கைகளால் நன்றாக கலந்து விடவும் .பிறகு வாணலியில் நெய் 250 கிராம் விட்டு.காய்ந்ததும் அதில் 50 கிராம் முந்திரிப்பருப்பு. (சின்ன சின்னதாக நறுக்கி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு)  நெய் மற்றும் முந்திரி பருப்பை அப்படியே நாம் கலந்து வைத்திருக்கும். பயத்தம்பருப்பு பவுடரில் சுற்றி ஊற்றி நன்கு கிளறி விடவும். எல்லா புறமும் நன்கு கிளறி. சூடு ஆறுவதற்குள் சின்ன சின்ன உருண்டைகளாக பயத்தம் பருப்பு லட்டு செய்யவும். பயத்தம் பருப்பு லட்டு ரெடி. (இதேபோன்று பயத்தம்பருப்பு க்கு பதிலாக. ரவையை வாணலியில் லேசாக வறுத்து விட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் .இதே போன்றுதான் ரவா லட்டு செய்ய வேண்டும்)

கேசரி போலி

 ஒரு கப் ரவையை வாணலியில் நெய் ஒரு ஸ்பூன் போட்டு வறுக்கவும். ஒரு கப்புக்கு 2 கப் தண்ணீர் விடுங்கள்.தண்ணீர் கொதித்ததும் அதில் கொஞ்சம் கேசரி பவுடர் போடுங்க. நல்லா கொதிக்கும்போது ரவையை அதில் கலந்து விடவும். அடுப்பு தீயை குறைத்து விடுங்கள். அதன்பிறகு .1கப் ரவைக்கு 2சீனீகப் சேர்த்து .அடுப்பில் வைத்து கட்டி இல்லாமல் சிறிதுநேரம் வேகவைக்கவும்.  4 ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய் பவுடர் சேர்த்து. நெய் பிரிந்து வரும்பொழுது கேசரியை இறக்கிடுங்க.பின்னர் மைதா மாவு அதில் கொஞ்சம் தண்ணிர் விட்டு துளி உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும் 15 நிமிஷம் ஊறவும் பின்னர் எலுமிச்சை அளவு மைதா மாவை உருட்டி சப்பாத்திக் கல்லில் வட்டமாக தேய்த்து அதில் கேசரியை ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும் நல்லா மூடிட்டு.மறுபடியும் மாவு தொட்டு ரவுண்ட் சப்பாத்தி மாதிரி செய்து.பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்த்ததும். இந்த கேசரி போலியை எடுத்து தோசைக்கல்லில் போட்டு. இரண்டு பக்கமும் நெய் விட்டு ஒரு தட்டில் எடுத்து அடுக்கி வைக்கவும். கேசரி போலி ரெடி.