ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
கேசரி போளி 100 கிராம் ரவை சக்கரை-ஒன்றரை கப், - 130 மில்லி கோரிப்பவுடர் 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் மைதாமாவுடன் கோரிப்டவுடர், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ரவையை நெய்யில் வறுத்து, ஒரு பங்கு ரவைக்கு இருபங்கு அளவு தண்ணீரை வாணலியில் ஊற்றி, வறுத்த ரவையைத் தூவி கிளறவும். இதனுடன் கேசரிப்பவுடர், சர்க்கரை, நெய் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும், பிசைந்த மைதாமாவை சிறிய சைஸ் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். நெய் தடவிய வாழை இலையில் இந்த உருண்டையை வைத்து, வட்டமாகத் தட்டி, ரெடியாக வைத்துள்ள கேசரியை இதனுள் சிறிது வைத்து மூடி, மறுபடியும் வட்டமாகத் தட்டவும். இந்த போளிகளை நெய் தடவிய தவாவில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும் சர்க்கரைவள்ளி கிழங்கு சுகியன் தேவையானவை: மைதாமாவு - 100 கிராம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு 4. பொடித்த வெல்லம் 100 கிராம். எண்ணெய் - 250 மில்லி, ஏலக்காய்தூள் சிறிதளவு. செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் ...